நிஜமான போராளி......!
ராஜ பரம்பரை குப்பத்து மக்களுக்காக குரல் கொடுத்தது. உயர் குடி பிற்படுத்தப்பட்ட மக்கள் நலன் காக்க தன் உயர் பதவியையும் இழந்தது.அடிமைப்படுத்தபட்டவன்,ஒடுக்கப்பட்டவன் தன் உரிமைக்காய் போராடினால் அதில் நியாயம் உண்டு.அம்பேத்கர் அப்படிப்பட்ட ஒரு போராளி. சுகபோகமான வாழ்கையை உதறி,கேன்சர்,கிட்னி போன்ற கொடிய காலன்களையும் கூடவே வைத்து கொண்டு கடைசிவரை சமுதாயத்தில் நிலவி வந்த சமுதாய ஏற்ற தாழ்வை சமன் செய்ய போராடி போலி போராளிகளாலும்,முதுகில் குத்திய அரசியல் குள்ளநரிகளாலும், மதம் பிடித்த மத யானைகளாலும் அரசியலை விட்டு ஓரங்கட்டபட்ட சிங்கம்...நிஜ சிங்கம்..விசவநாத் பிரதாப் சிங்..வி பி சிங்.அவர்கள் மறைந்த தினம்..நவம்பர் 27.... மும்பை குண்டு வெடிப்பு சம்பவமும் இதே நாளில் நடக்க (27.11.2008)... அவரது மறைவு பெரியளவில் பேசப்படாமல் இருட்டடிக்கப்பட்டது.
பெரியாரை பற்றி பேச ஆரம்பித்தால் இங்கே(தமிழகம்) பலருக்கு முதுகில் அரிப்பெடுக்கும்...நூல் கொண்டு அரிப்பை போக்கி கொள்வார்.... வடக்கே மண்டல் என்றாலோ வி பி சிங் என்றாலோ தீ குளிப்போம் என்பார்கள்...நூலும்/நூலுக்கு அடிமையானவர்களும்.



